"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, October 28, 2011

காதல் உயர்வாய் தெரிகிறது.....

மௌனம் கலையும்போது
சோகங்கள் விடியும்போது
கண்ணீர் உறையும்போது
கோபங்கள் வடியும்போது

அன்பு தலைதுவட்டும்போது
இனிமை மனதில் தித்திக்கும்போது
ஞாபகங்கள் நெஞ்சில் நிறையும்போது
உன்வசமே என்னை கொடுத்துவிடும்போது

அன்புத்தோட்டத்தில் நானும்
ஒரு மலராய் உன்னிடம் சேரும்போது
உன் இதயத்தில் எனக்காய்
எழுப்பிய கோவிலில் என்னை
அமர்த்தியபோது

காதல் உயர்வாய் தெரிகிறது.....

Wednesday, October 12, 2011

நாளை இந்தியா போய்விட்டு நவம்பர் 8 வந்துருவேன்...

அன்பின் நண்பர்களே,

நான் நாளை இந்தியா போவதால் இங்க கொஞ்ச நாள் காலியா இருக்கும்பா..

நவம்பர் 8 வந்துருவேன் குவைத்துக்கு... அதன்பின் தொடர்வேன்பா...

அன்பு நன்றிகள் எல்லோருக்கும்...

Thursday, October 6, 2011

காதல்..... காதல்......



காதல்.... காதல்...

நம்பிக்கையின் ஈரம் மனதில் இருக்கும்வரை
நம்பி கைப்பிடித்தவரை விடுவதில்லை காதல்.....

அன்பைக்கொடுத்து கைக்கோர்த்தவரை
அன்பையே தந்து சொர்க்கம் காட்டிவிடும் காதல்.....

கண்ணியம் குறையாது மாசற்ற மனத்தவரை
கண்ணீரால் பாவங்களை கரைத்துவிடும் காதல்.....

மன்னித்து குற்றங்களை மறந்துவிடும்வரை
மங்காது மனதில் நிலைத்து நின்றுவிடும் காதல்.....


காதலுக்காக எந்த விலை கொடுக்கவும்
காதலுக்காக எதையும்  இழக்கவும்   
உலகே தயாராய் இருப்பதுவும்
உண்மையில் இதனால் தானே  

Related Posts Plugin for WordPress, Blogger...