மௌனம் கலையும்போது
சோகங்கள் விடியும்போது
கண்ணீர் உறையும்போது
கோபங்கள் வடியும்போது
அன்பு தலைதுவட்டும்போது
இனிமை மனதில் தித்திக்கும்போது
ஞாபகங்கள் நெஞ்சில் நிறையும்போது
உன்வசமே என்னை கொடுத்துவிடும்போது
அன்புத்தோட்டத்தில் நானும்
ஒரு மலராய் உன்னிடம் சேரும்போது
உன் இதயத்தில் எனக்காய்
எழுப்பிய கோவிலில் என்னை
அமர்த்தியபோது
காதல் உயர்வாய் தெரிகிறது.....
சோகங்கள் விடியும்போது
கண்ணீர் உறையும்போது
கோபங்கள் வடியும்போது
அன்பு தலைதுவட்டும்போது
இனிமை மனதில் தித்திக்கும்போது
ஞாபகங்கள் நெஞ்சில் நிறையும்போது
உன்வசமே என்னை கொடுத்துவிடும்போது
அன்புத்தோட்டத்தில் நானும்
ஒரு மலராய் உன்னிடம் சேரும்போது
உன் இதயத்தில் எனக்காய்
எழுப்பிய கோவிலில் என்னை
அமர்த்தியபோது
காதல் உயர்வாய் தெரிகிறது.....
Tweet |