"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, August 6, 2011

உனக்கும் எனக்குமான.....

உனக்கும் எனக்குமான இடைவெளியை 
நினைவுகள் தின்று தீர்க்கட்டும்

நம்முள் உருவான காதல் 
உறுதியாய் நின்று பறைசாற்றட்டும்

நம்மில் நிறைந்த அன்பு கரைந்து 
மனதை உயிர்ப்பிக்கட்டும்

நம்மிடையே தொடங்கிய புரிதலின்மை 
என்றும் மறைந்து போகட்டும்

பெருகிய கண்ணீரில் உண்மை அன்பை
உரக்கச்சொல்லி கதறட்டும்

நம்மை இணைத்த இறைவன் 
பிரிந்திடாது காக்கட்டும்

இன்றைய விடியல் உனக்கு 
நன்மை மட்டுமே சேர்க்கட்டும்

உருகி கரையும் மனதுடன்
காதலை பிதற்றட்டும்

நான்கொண்ட மௌனமும்
காதல் சத்தியமென சொல்லட்டும்

பிரிவு நமக்குள் வேண்டாமென
இறையை வேண்டட்டும்

உன்னுள் என்னை முழுதாய் 
உயிர்ப்பித்த அன்பு அமைதியாய்

உன்னை என்னிடம் சேர்க்கும் 
என்ற நம்பிக்கையோடு காத்திருக்கட்டும்....

1 comment:

  1. ஆஹா..இங்கேயும் காதல் கவிதை மழை பொழிகிறதே...நினைவுகள் தின்று..உறுதியாய் பறைச்சாற்றி..அன்பு கரைந்து.புரிதலின்மை மறைந்து.. மௌனம் காதல் சத்தியமென சொல்லி வந்த கவிதையை பாராட்டிக்கொண்டே போகலாம் அற்புதம் அருமை அசத்தல்..etc., வாழ்த்துக்கள்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...