கண்மணி கண்மணி....
எழுதிய வார்த்தைகள்
அத்தனையும் அழித்தேன்
மனதினில் வேகமாக
உன் மனதை
என்றும் அது
வருத்திவிடக்கூடாதே
என்றே கண்மணி.......
உன் வார்த்தைகள்
என்னை வருத்தியபோதும்
வேகமாய் அழித்தேன்
என் மனதில் இருக்கும்
உன்னை அது
சுட்டுவிடக்கூடாது
என்றே கண்மணி........
சேமித்த அன்பும்
வைத்த காதலும்
காலமுள்ளவரை
நிலைத்து நிற்க
சுடும் சொற்களை
கொஞ்சமாவது
தவிர்ப்போமே கண்மணி......
எழுதிய வார்த்தைகள்
அத்தனையும் அழித்தேன்
மனதினில் வேகமாக
உன் மனதை
என்றும் அது
வருத்திவிடக்கூடாதே
என்றே கண்மணி.......
உன் வார்த்தைகள்
என்னை வருத்தியபோதும்
வேகமாய் அழித்தேன்
என் மனதில் இருக்கும்
உன்னை அது
சுட்டுவிடக்கூடாது
என்றே கண்மணி........
சேமித்த அன்பும்
வைத்த காதலும்
காலமுள்ளவரை
நிலைத்து நிற்க
சுடும் சொற்களை
கொஞ்சமாவது
தவிர்ப்போமே கண்மணி......
Tweet |
ஆஹா இங்கும் காதல் கவிதை சாரலடிக்கிறதே... சுடும் சொற்கள் கடும் சொற்கள் கொஞ்சம் மட்டுமல்ல முற்றிலும் தவிர்ப்போமே.... அழகான கவிதை பாராட்டுக்கள்
ReplyDelete