"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, July 9, 2011

மரணம் அன்பை வென்றுவிட்டதோ?






















தோள் சாயும் கணங்களில்
கண்கள் உறங்கும் வேளையில்
அன்பு விழித்துக்கொள்கிறதோ
தலையை கோதி அணைக்கிறதோ?

மரண பயத்தை நீக்குகிறதோ?
நானிருக்கிறேன் அன்பே என்கிறதோ?
உடல் விறைத்து எரிந்தாலும்
உள்ளம் உயிர்ப்பதை சொல்கிறதோ?

கண்கள் இறுதியாய் மூடினாலும்
மனதில் நிலைத்து நிற்கிறதோ?
யாதுமாய் உன்னுடன் நானிருக்கும்போது
மரணத்தைக்கூட அன்பு வென்றுவிட்டதோ?

கைகள் கோர்த்துக்கொள்ள
தோள்கள் கட்டிக்கொள்ள
விழிகளில் கண்ணீர் பெருக
உள்ளம் ஒன்றாய் இணைந்தது
உயிரும் ஒன்றாய் பிரிந்தது...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...