"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, June 4, 2011

மௌனமாய் இருக்கத்தான் முடியுமா ?

எண்ணங்களை எட்டி பிடிக்க முடியுமா
கற்பனைகளை கட்டி தான் போட முடியுமா
கனவுகளுக்கு கடிவாளம் இட முடியுமா
சந்தோஷத்தை அள்ளிச்செல்ல முடியுமா
 

எல்லாமே முடியும் நம்பிக்கை எனும்
நல்லவர் வாழும் மத்தியில் நாம் இருக்கும்போது
எண்ணங்களை அளவாக அளந்து
கற்பனைகளை கலராக்கி ரசிக்கவும் முடியும்
 

கனவுகளை நம் வழிக்கு கொண்டு வரவும் முடியும்
சந்தோஷத்தை நாமும் அனுபவித்து
பிறருக்கு பகிர்ந்து கொடுக்க முடியும்
 

நல்லவர் யாரெனெ அறியாத போது
அமைதியாக உதடுகளை மூடி
கண்களை காதுகளை திறக்கவும்
நல்லவரெல்லாம் நல்லவரெ
என்னும் கூற்று என்றும் பொய்யானதில்லை
 

காணும் காட்சிகளெல்லாம்
கேட்கும் ஒலியிலெல்லாம்
நன்மை தீமை சட்டென
தெரியாது போனாலும்
மெது மெதுவே உணர்த்தும்
அதுவரை மனமே மௌனம் கொள்
 

மௌனத்தில் கற்கும் பாடங்கள் அதிகம்
மௌனம் தரும் சுகமும் அதிகம்
தாயின் மௌனதாலாட்டு கேட்டதுண்டா
தாய் விடும் மூச்சு தான் மார்பில் 
சாய்ந்திருக்கும் மகவுக்கு தாலாட்டு
 

மனைவியின் மௌன மொழி கேட்டதுண்டா?
கேட்டதை வாங்கி தராமல் வீடு திரும்பும்
கணவனுக்கு அன்பு பார்வையும் இல்லை
அன்பு மொழியில் கதையும் இல்லை
சுட்டெரிக்கும் மௌனமே மனவியின் மொழியது
 

மௌனமாய் ஒரு கணம் இருந்து பார்ப்போமா?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...