"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Thursday, July 8, 2010

நீயே வேண்டும்.....நீ மட்டுமே வேண்டும்...

உறக்கத்திலும் அணைத்துக்கொள்ள
நீ வேண்டும்....

மன இறுக்கத்திலும் ஆறுதல் சொல்ல
நீ வேண்டும்....

இரக்கத்திலும் என் மனம் நிறைக்க
நீ வேண்டும்....

உருகும் உயிரிலும் உணர்வாய் கலக்க
நீ வேண்டும்....

இன்பச்சுவையிலும் திகட்டாது இனிக்க
நீ வேண்டும்....

துன்பச்சுமையிலும் சோர்ந்திடாது அருகே
நீ வேண்டும்...

கவிதைவரிகளிலும் தமிழாய் சுவைத்திட
நீ வேண்டும்....

இறுதிமூச்சிலும் உன்மடியில் சாய
நீ வேண்டும்.....

நீயே வேண்டும்... நீ மட்டுமே வேண்டும்.....

2 comments:

  1. உணர்வு ரீதியான அழகான வரிகள் நீமட்டும் வேண்டும்

    ReplyDelete
  2. அன்பு நன்றிகள் ஹாசிம்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...