"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, May 5, 2010

பிணக்கு.....

தத்தி தவறி வந்த தவறான வார்த்தைகள்
தளிர்நடை போடுமுன் மௌனமாகிவிட்டது

முகம் காட்ட மறுத்த நொடியிலும் தளராது
அவசியமற்ற வார்த்தைகள் வெளிவரதுடித்தது

ஊடல் கூடலாவதும் கூடல் ஊடலாவதும்
இயந்திர உலகில் சகஜமாகி போனது

புரிதல் இல்லாத இடங்களில் எப்போதும்
சலசலப்புகளுக்கு பஞ்சமில்லாமல் ஆனது

வார்த்தைகள் தடித்து வெடித்து சிதறியது
மௌனம் கட்டோடு விடுபட்டு போனது

அன்பு இதில் எங்கே மறைந்துவிட்டது
காதல் இங்கே எங்கே ஒளிந்துக்கொண்டது

சமாதானத் தூதுவிட நினைவுகள் உதவட்டுமே
பிணக்கு தீர்ந்து காதல்மீண்டும் தொடரட்டுமே....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...