"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 15, 2008

உன்னுள் நானாய் என்னுள் நீயாய்....

நீ விழுங்கும்
உமிழ்நீராய்
நான் பிறந்திருக்க கூடாதா?
நீ விழுங்கும்
ஒவ்வொரு துளியிலும்
உன்னுள் நான் கலந்து
கரைந்திருப்பேனே

உன் உடை கலைக்கும்
காற்றாய்
நான் பிறந்திருக்க கூடாதா
உன் அங்கம்
மறைத்து உன்னை
காத்திருப்பேனே
கழுகு கண்களிலிருந்து

நீ சுவாசிக்கும்
மூச்சாய்
நான் பிறந்திருக்க கூடாதா
உனக்கு உயிர் தரும்
உயிராய் உன்னுள்
உறைந்திருப்பேனே
உன்னுள் நானாய்
என்னுள் நீயாய்.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...