"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 15, 2008

பாவக்கணக்கு...

பாவக்கணக்கு
குறித்து வைப்பதில்லை
மனிதனின் ஏட்டில்

இறைவன் சிரிக்கிறான்
குறித்தும் வைக்கிறான்
என்ன தண்டனை
யாருக்கு தெரியும்

பாவம் செய்பவன்
யோசிப்பதில்லை
கொலை செய்பவன்
நிதானிப்பதில்லை

கணவன் மனதை
புண்படுத்தும் மனைவியோ
அன்பை அறிவதில்லை

வரதட்சணை கொண்டு
வரவில்லையா..
கொளுத்திவிடுகிறாள்
அன்பு மாமியார்

பெண்ணாய் பிறந்தால்
கள்ளிப்பால் சிசுக்கொலை
இறைவன் பொறுப்பதில்லை

இதெல்லாமே பாவக்கணக்கு
எழுதிவைக்கப்படும்
கணக்கு தீர்க்கப்படும்

அதுவரை பாவம்
பாவத்தை தொலைப்பீர்
இறைவனை நினைப்பீர்
அன்பு கொள்வீர்.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...