"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 15, 2008

உன்னுடனே என்றும் இருந்துவிட....

கவிதையாய் உன் கைகளில்
என்னை தொலைத்துவிட
வார்த்தைகளாய் பிறந்து
வரிகளாய் அணைக்கிறேன்

கனவாய் உன் கண்களில்
என்னை தொலைத்துவிட
நினைவுகளால் நிறைந்து
மனதால் இணைகிறேன்

கண்ணீராய் உன் கன்னங்கள்
நனைத்து விட காரணம்
தேடி அலைகிறேன் பிரியா
வரம் கேட்டு அழுகின்றேன்

வாழ்விலும் சாவிலும் என்றும்
உன்னுடனே என்னை சேர்த்துவிட
ஆண்டவனை மன்றாடுகிறேன்
அரூபமாய் என்னை மாற்றிவிடு....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...