"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 15, 2008

நண்பனே நண்பனே....

நல்ல உறவாய்
கண்டெடுத்த நட்பாய்
உற்ற சொந்தமாய்
பெற்றெடுத்த தாயாய்

மகிழ்ந்த சேயாய்
என்னுடனே இருந்து
என்னை காப்பவனாய்
கண்ணீர் துடைப்பவனாய்

கருத்து மோதலாய்
கனிவாய் கருணையாய்
கண்டிக்கும் ஆசானாய்
கோபத்தை விட்டவனாய்

கைக்கூப்பும் இறையாய்
இருப்பவனே நீயே
என்றும் என்
உயிர் நண்பன் நீயே.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...