"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 15, 2008

மகனே என் மகனே....

துன்பங்களை
மனதில் புதைக்காதே
உன்னையே வெறுக்காதே
தாயாய் அணைக்கும்
என் மடியில்
உன்னை சாய்த்துக்கொள்

என் கைகள் கோடரி
அல்ல மகனே
உன் மனதை வருடி
தென்றலை
உன்னிடமே திருப்பி
உன்னை விழுங்க
துடிக்கும் சோகங்களை
வேரோடு அறுக்கும்
கோடரியடா என் கைகள்

நிம்மதி உறக்கம்
எந்தன் மடியில்
அன்பு உணவு
எந்தன் கைகளில்
கனிவும் கருணையும்
என்றும் என் ஆசியும்
உன்னுடன் உண்டு மகனே

என்னை பார்க்க நீ
வரவே இல்லையென்றாலும்
முதியோர் இல்லக்கதவுகள்
திறந்தே தான் உள்ளது

நீ வருவாய் என்றோ
வேறு ஒரு தாய் தன்
மகன் கொண்டு வந்து
விட்டு போவான் என்றோ
மகனே கதவுகள்
திறந்தே தான் உள்ளது

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...