"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 15, 2008

நினைவுப்பெட்டகம்...

மனமென்னும் பெட்டகத்தில்
வைத்து அழகு பார்த்தேன்
உன் நினைவென்னும்
அரிய பொக்கிஷத்தை

முகம் சுளித்து
கன்னத்தில் குழி விழ
சிரிக்கும் சிரிப்பை
பொக்கிஷமாக்கி சேர்த்தேன்

உன் உடன் நடந்து
பூவின் மணம் நுகர்ந்து
உன்மத்தம் ஆகி
அதையும் சேர்த்தேன்.....

உன் காலில் குத்திய
முள்ளை பத்திரமாய்
ரத்து துணுக்கோடு
சேர்த்து வைத்தேன்...

கனிவும் காதலும்
கலந்த பார்வையோடு
தலை சாய்த்து
கண் சிமிட்டினாயே
அதையும் தான்....

எத்தனை நாளானாலும்
வயது கூடினாலும்
நினைவுகளின் இளமை
அழிவதே இல்லை...

முதுமை வந்ததே
மறதியும் கூடியதே
ஆனால் உன்னை
முத்தமிட்ட நிமிடம்
மட்டும் மறக்கவே இல்லை.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...