"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Friday, August 15, 2008

அரிதாரம் பூசாமல்.....

நடிக்க கற்றுக்கொண்டேன்
அரிதாரம் பூசாமல்
வாழ்க்கையில் நடிக்க
கற்றுக்கொண்டேன்

திருமண மேடையில்
முதல் பொய் சிரிப்பு
நடிக்க முயற்சி

புகுந்த வீட்டின் பெருமை
தாய் வீட்டில் மறைக்க
புன்னகை முகமூடி

துடிக்கும் வார்த்தைகள்
முகத்தில் காபியோடு
உமிழும்போது

கண்ணீர் மறைத்து
அழகாய் நடித்து
முயற்சியில் முதல் வெற்றி

சோகம் மனதில்
சிரிப்பு உதட்டில்
தாய் தந்தையோ

மனம் மகிழ்ந்தனர்
மகள் நன்றாய் வாழ்கிறாள்
என் நடிப்பு எப்படி??

நடித்து வாங்கியது
பதக்கம் அல்ல ஆனால்
கொடுப்பது சந்தோஷம்...

நடிப்பு தொடர்கிறது
வாழ்க்கை நீள்கிறது
ஆயாசம் தள்ளுகிறது

முதுமை வருகிறது
நடித்து நடித்து என்
உண்மை உணர்ச்சிகள்

மரத்தும் போனது
சுயம் மறந்து போனது
ஆனால் நடிப்பில் வெற்றி....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...