"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

கண் விற்று சித்திரம் வாங்கி....

தப்பி பிழைத்தோம்
தத்தி தவழ்ந்தோம்
நன்றாய் வளர்ந்தோம்
ஒருங்கே இணைந்தோம்
பண்பாடு கற்றோம்
அத்தனையும் விற்றோம்
கண் விற்று வாங்கிய சித்திரம்
காணமுடியாது தவிக்கிறோம்
கண்காணா தூரத்தில்
மனைவி மக்கள் ஓரிடத்தில்
எங்களை நினைத்து காத்திருக்க
கைக்கொள்ளிக்காகவும்
வாய்க்கரிசிக்காகவும்
இறுதி காலத்தில் பெற்றோர்
கண்ணீரில் கண்விழி பூத்திருக்க
முக்கா காசு சுமைக்கூலிக்காக
பாடுபடும் எங்களை
அந்நிய நாடு படுத்தும் பாடு
சம்பளமும் போதவில்லை
வாழ வழியும் தெரியவில்லை.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...