"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

எனக்கு ஏன் இப்படி?

காலண்டரின் தாள்கள் கிழிக்க
என் நாட்களும் கிழிக்கப்படுகிறதே
பிறந்தவர் என்றாவது இறப்பார் தான்
ஆனால் என் சாவு ஏன் இப்படி?

வரதட்சனை தந்தார்
வண்டி வாங்கி தந்தார்
நகையாக இழைத்தார்
என் பெற்றோர்

பதிலுக்கு என் கணவர்
எனக்கு தந்ததெல்லாம்
வயிற்றில் குழந்தையும்
உயிர்கொல்லி எய்ட்ஸும்...:(

தவறு செய்த கணவனுக்கு
தண்டனை மரணம் கிடைத்தது
தவறு செய்யாத எனக்கு ஏன்?
வயிற்றில் பூத்திருக்கும்
பிஞ்சு குழந்தைக்கு ஏன்
தடுக்க முடியாதா எய்ட்ஸை? :(

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...