"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

காக்கவிடாதே கண்ணா...

வரம் ஒன்று தந்து விடு கண்ணா
குறையில்லா மனம் ஒன்று
தந்து விடு எனக்கு கண்ணா
குறைகள் எல்லாம் நீ
நிறைகளாக்கி விடு கண்ணா
கண்டதும் பொங்கி பெருகும்
அன்பை வாரி தந்துவிடு கண்ணா
காணாத போதிலும் உன் அழியா
அழகு புன்னகையை அனுதினமும்
நினைத்து மகிழ்ந்திட
வரம் ஒன்று தந்துவிடு கண்ணா.....
வந்தவரெல்லாம் உன்னை நினைத்தனரோ
வந்து உன்னை துதித்தனரோ
அன்பால் உன்னை நிறைத்தனரோ
வாராது வந்த உன்னை
அள்ளி அணைத்தனரோ
போற்றி பாடினரோ
மறையாமல் மறைந்து
காத்துவிடு கண்ணா.....
இனியும் என்னை காக்கவிடாதே கண்ணா....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...