"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Wednesday, December 26, 2007

தெளிந்த மனம்.....

வேதனைகள் வெறுப்புகள் தனை மறைத்து
காதலெனும் ஒரு சொல்லில் தனை மறந்து
ஜீவன் போகும் வழிதனில் எல்லாம் தொலைத்து

காத்திருந்த காலமெல்லாம் வெறுமை நிறைந்து
சுவாசம் தனை தடை செய்து உயிர் வலிக்க
கோபம் வேண்டாம் பிரிவு வேண்டாம்

தன்னுள் எல்லாம் அடக்கி புன்னகையில்
அன்பெனும் ஒற்றை சொல்லில் அணைத்து
காட்டாற்று வெள்ளமென எண்ணங்கள்
புதிய ராகம் பூமியெங்கும் இசைக்க

உயிர் அமுது புகட்ட உள்ளத்துள் மறைத்த
வேதனைகள் வலிகள் மறந்தே தான் போனதே
குழம்பிய மனமும் அழகாய் தெளிந்ததே

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...