"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

உறவு தந்து உறவுக்கு பெயரும் தந்து....

நான் அன்பை மட்டுமே பகிர்ந்தேன்
நீ ஏன் உன் உயிரை எனக்கு தருகிறாய்
உறவு சொல்லி அழைக்கிறாய்

காணாமல் துடிக்கிறாய்
கண்ட பின் கண்ணீர்விடுகிறாய்
கேட்டால் உன்னை கண்டதில்
கண்களில் மழை பெய்கிறது என்கிறாய்
சந்தோஷத்திலும் அழுது தீர்க்கிறாய்

என்ன தான் செய்ய போகிறேன்
உன் நட்பு எனக்கு கிடைக்க
ஏதேனும் நல்லது இந்த ஜென்மத்தில்
செய்த ஞாபகமும் இல்லை எனக்கு

பதறி துடிப்பதேன் நான் அவஸ்தைப்பட்டால்
என்ன உறவாய் இருந்தோம் முற்பிறவியில்
அன்பாய் பிணைந்து
பாசத்தோடு இணைந்து
உறவுக்கு பெயரும் கொடுத்து
இன்னும் என்னென்னவோ

சோகங்களை இத்தனை சுமக்காதே
இறக்கி வைக்க ஆள் தேடாதே
கண்முன்னே நிற்கிறேன் பார்
மெதுவே இறக்கி வை என்னிடம்

நானும் துடைக்கிறேன்
உன் கண்ணீரையும் முடிந்தால்
உன் சோகத்தையும் முழுதாக

சோகமும் சுகம் தான் என்று
சோகப்பாட்டு பாடாதே
சந்தோஷக்கூச்சலில்
உன்னையும் சேர்த்துக்கொள்கிறேன்

கரைந்து விடட்டும் உன் சோகங்கள்
மறைந்து விடட்டும் உன் ப்ரச்சனைகள்
கைக்குள் பொத்தி கொள்ள முடியவில்லை
அதனால் மனதுள் பொத்தி வைக்கிறேன்
உன் நினைவுகள் என்னும் பொக்கிஷத்தை....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...