"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

கட்சி தொண்டு.....

ஆட்சியில் கலவரமா
எரியுங்கடா பஸ்ஸை
ஜாதிக்காரனை வெட்டிப்புட்டானா
எரியுங்கடா பஸ்ஸை
ஆளுங்கட்சியா இருந்தா
கண்டிப்பா ஜெயில் தண்டனை இல்லை
எதிர்கட்சியா இருந்தா
தண்டனையே இல்லை (அடுத்த ஆட்சியில்)
என்ன செய்தாலும்
தவித்து உயிர் விடுவது
மக்களே மூட மக்களே
நீங்கள் தானே
மறப்பது ஏனோ இதை
உயிர் இழப்பது ஏனோ
பலமுறை....
கொன்று குவிப்பதும்
செத்து மடிவதும்
யாரோ ஒருத்தரின்
சுயநலத்திற்காக மட்டுமே
குடும்பத்தை மறந்து
தன்னை கட்சியில் இழந்து
கிடைப்பது ஒன்றுமே இல்லையே..:(
வீட்டை காத்து நாட்டை காத்து
பின் செய்யுங்கடா கட்சி தொண்டு....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...