"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

வெறுப்பது ஏனோ...

ஆன்மாவை உள்ளடக்கி
உயிர் கொடுத்து
உருவம் கொடுத்து
வாரிசை சுமந்து
பத்திரமாய் பெற்றெடுத்து
பரவசத்தோடு எட்டி பார்த்து
மாமி அலுத்து கொள்கிறாள்
சே இதுவும் பொண்ணு தானா
கணவனோ வந்தும் பார்க்கவில்லை
பெண்ணில்லாத உலகமும் உண்டோ
பெண்னில்லாத தெய்வமும் உண்டோ
மனிதரே பெண்குழந்தை மட்டும்
வெறுப்பது ஏனோ?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...