"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

ஏனம்மா அனுப்பினாய் தனியே....

துணை வா என்றேன்
இருட்டிலும் துணை வந்தாய்
துன்பத்திலும் என்னுடன் இருந்தாய்
என் கண்ணீர் காண சகிக்கமாட்டாய்
பின் ஏனம்மா எனக்கு
திருமணம் செய்து வைத்தாய்
இத்தனை தூரம் ஏனம்மா அனுப்பிவைத்தாய்
வேரோடு பிடுங்கி தெரியாதவர்
வீட்டில் என்னை விட்டுவிட்டாயே
பயம்மாக இருக்கிறது அம்மா
என்னை தனியாக அனுப்பினாயே
வரதட்சனை போதவில்லையாம்
போட்ட நகைகள் போதவில்லையாம்
என்னை எரித்து விட்டார்கள் அம்மா
என் உடம்பு எரிகிறதும்மா
அம்மா என்னை உன் மடியில்
தலை சாய்த்துக்கொள் அம்மா
ஒரே உறக்கம் அதிகமாகிறது அம்மா
தாகம் எடுக்கிறது அம்மா
மடியில் சாய்த்துக்கொள்ளேன் அம்மா.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...