"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

சுகமான சுமையான நினைவுகள்

நான் செல்லும் இடமெல்லாம்
உன் நினைவுகள் என்னோடு
சஞ்சரிப்பது ஏனடா?
என் மனதில் நீ இருப்பதனாலா?
நான் முடிந்து விட்டால்
என் முடிவை என் நினைவுகள்
உனக்கு தகவல் தெரிவிக்குமாடா?
உன் நினைவுகளை நான் சுமப்பது போல்
என் நினைவுகளை நீ சுமக்கிறாயா
விட்டு பிரிய மனமில்லாமல்
உன்னை விட்டு சென்று விட்டால்
உயிர் முச்சு பிரிந்து விட்டால்
என்னுள் உறங்கும் உன் நினைவுகள்
உயிர் பெற்று எழுமா?
காற்றோடு கலந்து உன்னிடம் சேருமா
சேர்ந்த நினைவுகள் நலம் விசாரிக்குமா
என் பிரிவு உன்னை வருத்தும்போதெல்லாம்
உன் கண்ணீரை துடைக்குமா?
விளையாட்டு வினையாகவேண்டாம்
உன்னை நான் பிரியவும் வேண்டாம்
நம் நினைவுகள் என்றும் நம்மோடு
இடம் மாறி உன்னோடது என்னோடு
என் நினைவுகள் உன்னோடு
வாழ்வோம் நினைவுகளை சுமந்து
பிரிவு உடலுக்கே ஆன்மாவுக்கில்லையே
ஆதலால் கடப்போம் நாட்களை
நினைவுகள் சுமந்த சுகமான சுமையோடு.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...