"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

நிம்மதி உறக்கம் கல்லறையிலும் இல்லையே..

என்னை புதைத்து
என் நினைவுகளையும் புதைத்து
என் காதலையும் சேர்த்தே
புதைத்து விட்டாயோ காதலியே
என் கல்லறையில்.....:(

என் வாழ்வும் சாவும் காதலியே
உன் கைகளில் என்றாகிவிட்டதே
காதலை பூப்பூக்க வைத்த என் நெஞ்சில்
நெருப்பு பற்ற வைக்க முடிந்ததே
எப்படி காதலியே

உன் காதல் பொய்யானதே
என் அன்பு மெய்யானதே
மனம் வேண்டாம்
பணம் மட்டும் போதுமென
என்னை தவிக்க விட்டாயே

கல்லறையில் கூட
என்னால் உறங்க முடியவில்லை
உன் நினைவுகள்
என்னை படுத்துகிறதே
நீ மட்டும் எப்படி நிம்மதியாய்
உறங்கி கொண்டிருக்கிறாய்
சுகமான மெத்தையில்?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...