"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

உண்மை அன்பை உணர்ந்தேன்....

உண்மை அன்பு எங்கே
நன்றாய் அறிந்தேன் கண்ணே
தனக்காக வாழாமல்
எனக்காக வாழும்
உன் தியாக உணர்வே
உண்மை அன்பென உணர்ந்தேன்
தன்னை நினைக்காமல்
என்னை நினைத்து
உன்னை வருத்திக்கொள்வதே
உண்மை அன்பென உணர்ந்தேன்
காற்றில் கூட
குளிர் தொடாமல்
என்னை அணைத்ததே
உண்மை அன்பென உணர்ந்தேன்
உச்சி வெயில்
என்னை சுடாமல்
உன் முந்தானையால்
என்னை போர்த்தியதே
உண்மை அன்பென உணர்ந்தேன்
உன் ப்ரார்த்தனைகள்
என்னை கவசமாக காத்ததே
உண்மை அன்பென உணர்ந்தேன்
என் குணங்களை கூட
உன் அன்பு மனதால் சிறைசெய்து
என்னையே மாற்றிய அதிசயம்
உண்மை அன்பென உணர்ந்தேன்
இத்தனை போதும் இந்த ஜென்மத்திற்கு
இனி வரும் ஜென்மத்தில்
உனக்கே துணையாக சேர்ந்து
உன்னை பூஜிக்க உனக்கு சேவகம் செய்ய
என்னை அனுமதிப்பாயா கண்ணே

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...