"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

பாரதி பாடிய பாட்டு

பாரதி பாடிய பாட்டு
இன்று பிள்ளைகள் படும் பாடு
பாரதி சொன்னான் அன்று
நடைமுறை படுத்தவில்லையே இன்று
காலை எழுந்தவுடன் படிப்பு
இவ்ளோ வீட்டுப்பாடம் கொடுத்தால்
படிக்க ஏதய்யா பாரதி நேரம்
பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
சனியனே பீடை உப்பே இல்லடி
அம்மா அப்பா உன்னை கூப்பிடறா பாரு
மாலை முழுதும் விளையாட்டு
தொடர்சீரியல் பார்க்க தொடங்கினால்
இடி விழுந்தாலும் கேட்காத அம்மாவே
நாங்கள் விளையாட விட்ட இடத்திலெல்லாம்
கட்டிடங்கள் எழுப்பினால்
எங்கே தான் விளையாடுவது.....
பாரதி இன்று பிள்ளைகள்
படும் கஷ்டங்களை பாரேன்
வீட்டு பாடம் எழுதலன்னா பள்ளியில் அடி
வீட்டு வேலை செய்யலன்னா சிற்றன்னையின் மிதி
எங்கே தான் போவார்கள் நிம்மதி தேடி......

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...