"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

உலகத்தின் முதல் காதல்....

இன்றைய மனிதர்களின்
காலடி தடங்களால்
சிதைக்கப்படாத
வனாந்திரத்தில்
தானே தோன்றி
தானே வளர்ந்து
தனிமையில் நடமாடி
களங்கம் இல்லாமல்
மறைந்து மறைக்காமல்
வாழ்ந்தாலும்
காதல் மட்டும் மனதில்
புகுந்ததெப்போது?
ஏவாள் அவனை
நெருங்கியது எப்போது
ஆதாம் ஏவாளை நினைத்து
காதல் கடிதங்கள் வரைந்தானா?
காதல் மட்டும் பொதுவானதோ
பிறந்த முதல் மனிதனுக்கு
வந்த காதலில்
இதோ உலகம் பரந்து விரிந்து
காதல்மணம் பரப்பிக்கொண்டிருக்கிறதோ?

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...