"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

திருமதியாக்கி விடேண்டா...

பக்கங்கள் நீள்கிறது
மனமோ அலைகிறது
உன்னை பார்க்க துடிக்கிறது
கடிதங்கள் பல எழுதுகிறது
நகம் கடித்து குதறுகிறது
கனவில் உன் முகம்
காணும்போதெல்லாம் உன்
நினைவுகள் என்னை கொல்கிறது
எங்கே என்ன செய்கிறாயோ
மாலையிட வருவாயோ
வழி மாறி போவாயோ
என்று கலங்கி தவிக்கிறது
காதலில் விழுந்து
தணலில் இட்டது போல
மனம் இன்னும் துடிக்கிறது
ஒன்றான இருமனங்கள்
இணைவது திருமணத்தில்
வந்து விடேன் காதலா....
கடிதம் எழுதி எழுதி
ஓய்ந்து போன கைகள்
ஓய்ந்து போகாத எண்ணங்கள்...
மனங்கள் இணைந்து
எண்ணங்களும் இணைந்து
என் கடிதங்கள் கிடைத்து
வேகம் வந்து என்னை உன்
திருமதியாக்கி விடேண்டா.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...