"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

காதல் வாழ்க்கையாகுமா?

காதலில் தோன்றி
அன்பில் திளைத்து
பாசத்தில் மூழ்கி
முத்துக்களை பெற்றெடுத்தோமே
காதலல்லாது வேறென்னவாம்.....

பசித்தால் தானும் பகிர்ந்துண்டு
வலித்தால் தானும் துடித்து தவித்து
மரணித்தால் அழுது புரண்டு
உண்டானால் மகிழ்ச்சியில் திளைத்து
காதல் அல்லாது வேறென்னவாம்

உலகமே காதலில் தோன்றியது
காதல் இல்லாத உயிரினமும் இல்லை
மிருகங்களுக்கும் காதல் உண்டு
பட்சிகளுக்கும் காதல் உண்டு
மனிதருக்கு காதல் இல்லாமல்
வாழ்க்கையே இல்லை....

குழந்தையில் பொம்மை மேல் காதல்
பள்ளி வயதில் புத்தகத்தின் மேல் காதல்
பருவ வயதிலோ முதல் காதல்
திருமணத்தின் பின்னோ உண்மை காதல்
முதிர்ந்த பின் துணையின் மேல் காதல்
மரணம் நெருங்க இறைவன் மேல் காதல்

உலகமே காதலின் பிடியில்
இதில் உண்மை காதலென்ன
உடையாத காதலென்ன
பிரியாத காதலென்ன
பிடிபடாத காதலென்ன
பார்க்காத காதலென்ன

பெண்ணை பிடிக்க காதலை முயற்சிக்கிறான்
பிடித்த பின்னோ காதலை முறிக்கிறான் தேவன்
முறித்த காதலின் வலியில் துடிக்கிறான் காதலன்
காதலனை காக்க வருகிறாள் மற்றொருத்தி மனைவியாக

காதல் வார்த்தை மட்டுமல்ல
காதல் வாழ்க்கை கூட
காதல் இல்லா கவிதையும் இல்லை
காதல் இல்லா வாழ்க்கையும் இல்லை

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...