"கதம்ப உணர்வுகள்" தங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, December 22, 2007

நினைவு நல்லது வேண்டும்.....

அடுத்தவர் நம்மை இகழ்ந்தாலும்
நம்மை என்றும் புறம் கூறினாலும்
தான் செய்த தவறை அசறாமல்
நம் மீது பழியாக விழுந்தாலும்
நல்லதே நினைத்து உதவி செய்து
நமக்கே கெடுதலாக முடிந்தாலும்
அடுத்தவர் பசி அறிந்து அவருக்கு
அன்போடு உணவிடும்போதும்
கை நீட்டி உதவி கேட்டு வரும்போது
செய்ய மனமிருந்து செய்தாலும்
செய்ய மனமில்லாது போனாலும்
வீண்பழியை சுமந்தாலும்
நம்மை பற்றி கலகம் மூட்டினாலும்
நம்மை வேண்டாமென ஒதுக்கினாலும்
நம்மை மறுத்து வெறுத்தாலும்
நினைவு நல்லதே வேண்டும் என்றும்.....

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...